திங்கள், 7 ஜனவரி, 2013


.
காதலொன்று வாழ்க்கை தனில் நுழைந்து விட்டால்
நாசம் நாசம் சர்வமும் நாசம்...

ரத்தத்தை விட வேகமாய் பாயும்
மூளை நரம்புக்குள் ஞாபக வியாதி!

தூங்கும் நேரம் விழித்திருந்தும்
விழிக்கும் நேரம் தூங்கி போகும் விழிகள்!

காதலை மட்டுமே பேச சொல்லும்!

காதலின் இசையையே செவிகள் அறியும்!

இதயம் இருந்தும் இல்லாது போகும்!

உண்ணும் உணவோ செரிக்காத வயிறு!

சாலை சாக்கடை எதுவும் அறியாது
கையில் இருக்கும் கொலை பேசி!

மிதி வண்டி மறந்து கால்கள் நடந்தே போகும்!

இறுதியில் மிச்சமாய் இருப்பது உயிரும் மயிருமே!

காதலொன்று வாழ்க்கை தனில் நுழைந்து விட்டால்
நாசம் நாசம் சர்வமும் நாசம்...