வியாழன், 16 அக்டோபர், 2014

வெயில்


கொடுத்து கொடுத்தே
சிவந்த கை கொண்ட
கருணனின் தகப்பனை
வழிபட்ட அளவு
யாரும் வருனனை
வழிபட்டதில்லை!

வெயிலுக்கு எப்பொழுதுமே
காலமும் நேரமும் உண்டு

உச்சியில் முத்தமிடும்
வெயிலை
என்னதான் நாம்
திட்டி தீர்த்தாலும்
மழையை ஒதுக்கவே
பெரும்பாலும்
குடை பிடிக்கிறோம்!

தொன்னூறுகளில்
சச்சின் நிற்கும் பொழுதில்
குறுக்கிட்டால்
எல்லோர் நாவிலும்
வதை படும்
மழை!

வெயிலுக்கு நிறம் உண்டு
மழையின் நிறமோ இருள்

எப்போதுமே
மழை பெய்து கொண்டேயிருக்கும்
ஊர்களிலெல்லாம்
வெயில் தான் கவிதை!