வியாழன், 13 பிப்ரவரி, 2014

காதலினால்




காதலும்
கடவுளும் 
ஒன்றுதான்
ரெண்டுமே இருக்கு ஆனா இல்ல!!!

நீ விட்டுச்சென்ற அவ்விடமே
விழித்துகொண்டிருக்கிறது
என் மேல் நீ வைத்திருப்பதாய் சொன்ன
காதல்!!!

ஒவ்வொரு திருமணத்திலும் 
எங்காவது செத்து கொண்டுதானிருக்கிறது 
காதல்!!!

உனக்காக எழுதப்பட்ட கவிதைகளனைத்தும்
இன்று நண்பனின் காதலியிடம்
அவளுக்காக எழுதப்பட்டதாய் 
அவனிடமிருந்து!!!

நீயே வேண்டுமென்றே
வேண்டி நின்றேன்,
நீயோ வேண்டும் என்றே 
வேண்டா வெறுப்பில்
எனை வேண்டாமேன்றாய்!!!

அழகான சிறு பொய்கள் சொல்லி
உன்னை ஏமாற்றுபவனாயிருந்தேன்
ஆனாலும்
ஏமாந்து போனதோ நான் தான்
நீ என்னை விரும்புகிறாய் 
என்று சொன்ன ஒற்றை பொய்யினால்!!!

ஏதோ தவறு செய்து விட்டு
மன்னிப்பு கேட்டு அழ தொடங்கினாய்,
நானும் அழுதுவிட்டேன்
இன்று தான் புரிகிறது
என்னை மொத்தமாய் அழவைக்க
அது நீ பார்த்த ஒத்திகை என்பது!!!

எனக்கான கல்லறையை 
நானே செதுக்கி கொண்டிருந்தேன்
நீ என்னுடனிருந்த வேளைகளிலெல்லாம்!!!

காதலர் தினம் கொண்டாடுவதர்க்காகவே
இங்கு பல காதல்கள் 
முளைக்கின்றன!!!