கவிதைகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கவிதைகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், 5 ஜனவரி, 2016

சகிப்பின்மை

சாதாரண மழையின் போதும், பேருந்தினுள்ளும் மழையடிக்க குடை பிடித்து சகித்து கொள்கிறேன்! எதுவுமே செய்திராத அரசியல்வாதி, மறுபடியும் ஓட்டு கேட்டுவர காசு வாங்கி சகித்து கொள்கிறேன்! சாலை விதியை சரியாய் மதித்தும், சில எதிர்ப்பார்க்கும் போக்குவரத்து காவலரிடம் ரூபாய் நூறு நீட்டி சகித்து கொள்கிறேன்! கடவுள் உயர்வு தரும் நம்பிக்கையில், காசு பார்த்து விபூதி தரும் அர்ச்சகரையும் சகித்து...

பசலை நோய்!

உனக்காக நான் இருப்பேன் என்னிதயம் முழுதும் உன் ஞாபகத்தில் எனக்காக நீ இருந்தால் என்னுலகம் முழுதும் உன் காலடியில் வந்து போன உந்தன் நினைவில் வெந்து போகுது எந்தன் இதயம் நீயும் இருந்தால் மண்ணில் இருப்பேன் இல்லை என்றானால் மண்ணில் புதைவேன் உனது முகம் பார்க்கவே காத்து இருந்தேன் காத்து இருந்தேன் நீ எங்கே எங்கே எங்கே? நீ வீசிய வார்த்தை என் செவியில் ஒலிக்குதே நீ பேசிய மௌனம் என்...

செவ்வாய், 3 நவம்பர், 2015

அம்மாவின் அரிவாள்மனை

முதுகில் எதை வைத்து அழுத்தினாலும்நறுக்கி தள்ளும்அம்மாவின் அரிவாள்மனை! அம்மாவிற்கு சீதனமாக தரப்பட்டஎத்தனையோ பண்ட பாத்திரங்கள்துருப்பிடித்து பழசாகிபழைய இரும்புக்கும்பொங்கல் முந்திய நாள் கருகியும்போன போதும்அரிவாள்மனை மட்டும்பக்குவமாய் பாதுகாக்கப்பட்டு வந்தது! அம்மாவின் அப்பா பட்டறையில்அவளுக்காகவே அவராள்அடிக்கப்பட்டு உருப்பெற்றஅரிவாள்மனையாதலால்அதற்கு எப்பொழுதுமே தனிச்சிறப்பு! அவசரத்திற்கு...

புதன், 12 ஆகஸ்ட், 2015

வஞ்சனை

இந்த உலகத்தில் உள்ள எல்லா வஞ்சனைகளுக்கும், துரோகங்களுக்கும் விளக்கு பொருத்தி ஒரு உருண்டை செய்தால் அது சூரியனை விடவும் மிக பிரமாண்டமாகவும் அதிக வெளிச்சம் தரக்கூடியதாகவும் இருக்கும்....

செவ்வாய், 11 ஆகஸ்ட், 2015

காற்று

காற்று இந்த கானகத்தின் உயிர் மூச்சு! மலரில் வாசமாய் உயிரில் சுவாசமாய் மூங்கிலில் ராகமாய் வாழ்வின் பாகமாய் எல்லா வடிவிலும் நிறைந்திருக்கும் காற்று இந்த கானகத்தின் உயிர் மூச்சு! காற்று இசையின் தொடக்கமது மூங்கிலை விறகாகாமல் காப்பாற்றிய இனிய ராகமது காற்று இல்லையெனில் காதுகளும் தேவையில்லை இசைக்கே...

கனவுகள்

கனவுகள் எனது கவிதைகள் கண்களே அறியாத  காட்சிகள், இருளிலும் அழியாத வெளிச்சங்கள்! கனவுகள் இரவிலே எனது பாதைகள், இதயம் இனிக்கும் இன்பங்கள்! கனவுகள் ஆகாயம் தொட்டுவிடும் ஆசைகள், அணையாதிருக்கும் நெருப்புகள்! கனவுகள் விதைகளாயிருக்கும் விருட்சங்கள் வாழ்வை எட்டிப்பார்க்கும் இலட்சியங்கள...

உணவா மருந்து

வள்ளுவனையும், பாரதியையும் தினந்தோறும் படித்துவந்தேன் அவர்களின் கருத்துகளில் ஒரு சந்தேகம் உண்டாயிற்று சந்தேகத்தை நிவர்த்தி செய்ய இருவரையும் காண சொர்க்கத்திற்கே சென்றேன் முதலில் வள்ளுவனைக் கண்டேன் அய்யனே வணக்கம் உங்கள் குறட்பாலில் ஒரு சின்ன சந்தேகமென்றேன் என்ன என்று வினவினார் வள்ளுவன் அய்யனே செவிக்குணவில்லாத...

வெள்ளி, 31 ஜூலை, 2015

ஏவுகணை நாயகர்

பாரதி கண்ட அக்கினி குஞ்சை வளர்த்தெடுத்து சிறகு முளைக்கபறக்க செய்தவரே! ஏவுகணைகளும் எந்திரங்களும் எளிதாய் வசப்படுத்திய ஏவுகணை நாயகரே! தூக்கத்தில் வந்த கனவுகளையும் கூட தூங்கவிடாமல் செய்யும் கனவுகளாய் மாற்றியவரே! அணுவிலும் அமைதிக்கண்ட அதிசயப்பிரவியே! அமெரிக்காவின் செயற்கைகோளையே அரலச்செய்த ஆச்சரியமே! தமிழ்வழிக்கல்வியிலும் அறிவியலை சாத்தியப்படுத்திய அறிவியல் சக்கரவர்த்தியே! பெயரின்...

வெள்ளி, 19 டிசம்பர், 2014

புழக்கடை முனிகள்

பெசாவரென்றால் உய‌ர‌மான‌ கோட்டையாம் கோட்டையின்  அடித்தளமின்றோ மண்ணுக்கடியில் மண்ணோடு மண்ணாய், ராணுவ பள்ளியோ பிள்ளைகளின் சுடுகாடாய், கனிஷ்கரின் தலைநகரே இன்று கண்ணீரில் கொடுநரகாய் ஏய் தாலிபான் மிருகமே பள்ளிக்குழந்தைகள் இன்றுனக்கு பலியாடாய் நிச்சயம்  ஒருநாள் நீயும் படுகேவலமாய் பலியாவாய் புத்தகமேந்திய கைகள் ஏ.கே நாற்பத்தியேழேந்திய கைகளையும் விட வலியதென்றோ உன்...

வியாழன், 16 அக்டோபர், 2014

வெயில்

கொடுத்து கொடுத்தே சிவந்த கை கொண்ட கருணனின் தகப்பனை வழிபட்ட அளவு யாரும் வருனனை வழிபட்டதில்லை! வெயிலுக்கு எப்பொழுதுமே காலமும் நேரமும் உண்டு உச்சியில் முத்தமிடும் வெயிலை என்னதான் நாம் திட்டி தீர்த்தாலும் மழையை ஒதுக்கவே பெரும்பாலும் குடை பிடிக்கிறோம்! தொன்னூறுகளில் சச்சின் நிற்கும் பொழுதில் குறுக்கிட்டால் எல்லோர் நாவிலும் வதை படும் மழை! வெயிலுக்கு...

ஞாயிறு, 18 மே, 2014

புத்தம்

போரை வெறுத்தவன் அமைதி விரும்பி அதை பரவ செய்யஇங்கிருந்துஅனுப்பிய ஆயுதம்!பரவியதோ போர்நமக்கெதிராய்!!...

வியாழன், 13 பிப்ரவரி, 2014

காதலினால்

காதலும் கடவுளும்  ஒன்றுதான் ரெண்டுமே இருக்கு ஆனா இல்ல!!! நீ விட்டுச்சென்ற அவ்விடமே விழித்துகொண்டிருக்கிறது என் மேல் நீ வைத்திருப்பதாய் சொன்ன காதல்!!! ஒவ்வொரு திருமணத்திலும்  எங்காவது செத்து கொண்டுதானிருக்கிறது  காதல்!!! உனக்காக எழுதப்பட்ட கவிதைகளனைத்தும் இன்று நண்பனின் காதலியிடம் அவளுக்காக எழுதப்பட்டதாய்  அவனிடமிருந்து!!! நீயே வேண்டுமென்றே வேண்டி...

திங்கள், 7 ஜனவரி, 2013

. காதலொன்று வாழ்க்கை தனில் நுழைந்து விட்டால் நாசம் நாசம் சர்வமும் நாசம்... ரத்தத்தை விட வேகமாய் பாயும் மூளை நரம்புக்குள் ஞாபக வியாதி! தூங்கும் நேரம் விழித்திருந்தும் விழிக்கும் நேரம் தூங்கி போகும் விழிகள்! காதலை மட்டுமே பேச சொல்லும்! காதலின் இசையையே செவிகள் அறியும்! இதயம் இருந்தும் இல்லாது போகும்! உண்ணும் உணவோ செரிக்காத வயிறு! சாலை சாக்கடை எதுவும் அறியாது கையில்...

சனி, 22 டிசம்பர், 2012

என் பப்பி

என் பப்பியின் கவிதை  புரிவதே இல்லை  என் மேல் வீட்டு அம்மாவுக்கு  "நாய் ஏன் இப்படி குரைக்குது?"  என்கிறாள்!!  என் பப்பியை விட  மேலும் சத்தமாய்!!!...

அந்த ஒரு கேள்வி

படித்து தெளிந்த பின்னும் பதில் கூற முடியாமல் பாமரனிடம் தோற்கச்செய்த அந்த ஒரு கேள்வி இன்னும் என் நினைவில் நீங்காத காயங்களாய்! தூக்கத்தில் கூட, கவிசேர்க்கும் என்னை சிந்தனை குதிரைகளை ஓடவிடும் நேரத்தில் அந்த ஒரு கேள்வி இன்னும் உறங்கவிடாமல்! ஆயிரம் கவிதைகளில், ஆழ்ந்த கருத்துகளால், அறிவுரை கேள்விகளுடன், பறந்து வந்த என்னை அந்த ஒரு கேள்வி சிறகை என்னுடன் நெருங்கவிடாமல்! கவிதை...