திங்கள், 29 ஜூலை, 2019

ஆதலினால் காதல் தவீர்



இயல்பாய் இருக்க முடிகிறதா உன்னால்???

சிரிக்க மறந்ததுண்டா நீ???

மார் அடைப்பு இல்லாமல் இதயவலி உணர்ந்ததுண்டா???

உறக்கம் கெடுக்கும் கனவுகள் வந்ததுண்டா???

காயம் தரும் காத்திருப்புகளுக்கு நேர விரயம் செய்ய தயாரா???

இந்த உலகையே வெறுக்கும் நிலைக்கு வந்ததுண்டா???

தனியேப்பேசி தன்னிலை மறக்கும்
பித்தநிலை அடைந்ததுண்டா???

இரவு பகலாய் பகலோ இரவாய் குழப்பும் மாற்றம் கண்டதுண்டா???

தண்ணீரின்றி வறண்ட பூமியாய்
கண்ணீரின்றி கண்கள் வேண்டுமா???

பிரிவின் வலி மிகவும் கொடிது
அனுபவித்து பார்க்கும் ஆவலுண்டா???

நீச்சல் தெரியாமல் கிணற்றின் ஆழம்
குதித்து அறியும் சாகசம் தேவையா???

அலைப்பேசி அனல்பேசியாக
அப்புறம் அப்புறமென அநாவசிய பேச்சுக்கள் அவசியந்தானா???

பட்டாம்பூச்சி பறக்கும் திசையெல்லாம் பார்த்து ரசிக்கும் நேரமிருக்கிறதா???

வரமாய் தோன்றும் சாபம் காதல்...
சொர்க்கத்திலும் நரகம் காதல்...
அமிர்தில் கலந்த ஆலகாலம்...
பரந்தவெளியில் குறுகிய வட்டம்...

காதல் போதையில்...
அண்ணாந்து பார்த்தால் பூமி
குனிந்து பார்த்தால் வானம்
தலைகீழாய் நீ...!

ஆதலினால் காதல் தவீர்...!