செவ்வாய், 11 ஆகஸ்ட், 2015

உணவா மருந்து



வள்ளுவனையும்,
பாரதியையும்
தினந்தோறும் படித்துவந்தேன்
அவர்களின் கருத்துகளில்
ஒரு சந்தேகம் உண்டாயிற்று
சந்தேகத்தை நிவர்த்தி செய்ய
இருவரையும் காண
சொர்க்கத்திற்கே சென்றேன்

முதலில்
வள்ளுவனைக் கண்டேன்
அய்யனே வணக்கம்
உங்கள் குறட்பாலில்
ஒரு சின்ன சந்தேகமென்றேன்
என்ன என்று வினவினார்
வள்ளுவன்
அய்யனே
செவிக்குணவில்லாத போழ்து சிறிது
வயிற்றுக்கும் ஈயப் படும்
என்றீர்
ஆனால்
எங்களின் செவிகளோ வயிற்றிற்க்கு
சிறிது ஈவதர்க்கான உணவில்லாது
அடைத்து போயிற்று! என்றேன்

வள்ளுவன்
தமது குறளை கொஞ்சம்
மாற்றி செய்தான்
'வயிற்றுக் குணவில்லாத போழ்து இங்கு
செவ்களும் மூடப் படும்"
வள்ளுவனிடம் நன்றி சொல்லி
அங்கிருந்து நகர்ந்தேன்.

அடுத்ததாக
பாரதியைக் கண்டேன்
மகாகவியே வணக்கம்
உமது பாடலில்
ஒரு சின்ன சந்தேகமென்றேன்
என்ன என்றான் பாரதி
பாரதி நீ
"தனியொறு மனிதனுக்கு
உணவில்லையெனில்
ஜகத்தினை அழித்திடுவோம்"
என முழங்கினாய்
ஆனால் நாங்கள்
இந்த ஜகத்தினை
எத்தனை முறைதான்
அழிப்பது?

பாரதியும் தமது பாடலை கொஞ்சம்
மாற்றிச் செய்தார்
தனியொரு மனிதனுக்கு மட்டும்
உணவில்லையெனில்
ஜகத்தினை அழித்திடுவோம்"
பாரதியிடமும் நன்றி சொல்லி

உணவே மருந்தாம்
என சொன்ன சித்தனை
உணவே வேண்டாத
மருந்து தரச் சொல்ல
தேடி அலைகிறேன்!

4 கருத்துகள்: