புதன், 31 டிசம்பர், 2014

கு(து)ரு




மாதா பிதா குரு தெய்வம் எனும் வரிசையில் மூன்றாவதாய் கூறப்பட்ட குருவான ஆசிரியர்களை பற்றி தான் இந்த பதிவு ஆனால் மதிப்பு மிக்க இந்த மூன்றாம் இடத்தில் இருக்கும் ஆசிரியர்களை பற்றி அல்ல நான் சந்தித்த சி() கீழ்த்தரமான ஆசிரியர்களை பற்றியது.

முதலாவதாக நான் இங்கே கூறப்போவது இரட்டை அர்த்த ஆசிரியரை பற்றி. இவர் வகுப்பில் பாடத்தின் இடையேயும் இரட்டை அர்த்தம் பொருள் படும் படியாகவே பேசுவார். மாணவ மாணவிகள் என்ன நினைகிறார்கள் என்பதை பற்றி சிறிதும் யோசிக்கவே மாட்டார்.

அடுத்தது போதை ஆசிரியர். வகுப்பிற்கு கூட முழு போதையோடு தான் வருவார். கையில் காசில்லாத நேரங்களில் எங்களிடமே கடன் வாங்கி(திரும்பி வரா கடன்) இருக்கிறார். ஆனாலும் இவரிடம் உள்ள ஒரே நல்ல விஷயம் எவ்வளவு போதையில் இருந்தாலும் என்றும் கண்ணிய குறைவோடு நடந்து கொண்டதில்லை.

அடுத்தது காம பார்வை ஆசிரியர். இவர் படிக்கின்ற மாணவிகளை மட்டும் அல்லாது உடன் பணிபுரியும் ஆசிரியைகளையும் காம கண்ணோடு தான் பார்ப்பார். என்னுடன் பயிலும் மாணவியின் அன்னையும் ஒரு ஆசிரியையாய் பணி புரிந்து வந்தார் மாணவியின் தந்தை அப்போது வெளிநாட்டில் வேலை பார்த்து வந்தார். நம் காம பார்வை ஆசிரியர் அந்த மாணவியிடம் உன் அம்மா ஊரில் எந்த ஆண்களிடம் எல்லாம் பேசுவார் தனியாக இருக்கும் போது என்ன செய்வார் போன்ற கேவலமான கேள்விகளை எல்லாம் கேட்டிருக்கிறார்.

அடுத்தது காதல் மன்னன் ஆசிரியர். இவர் என்னுடன் பயிலும் மாணவியிடம் தன் காதலை கூறியுள்ளார்(செருப்படி வாங்கினாரா என்பது அவருக்கும் அந்த மாணவிக்கும் மட்டுமே தெரியும்) இதை அந்த மாணவியே எங்களிடம் கூறி வேதனை பட்டார். அதன் பிறகு எத்தனை மாணவிகளிடம் நூல் விட்டு பார்த்தார் என்பது தெரியவில்லை.

இது போன்ற ஆசிரியர்கள் இன்றுவரையிலும் அனைவரின் வாழ்க்கையிலும் இருக்க தான் செய்கிறார்கள். இப்படிப்பட்டவர்களை எல்லாம் தெய்வத்திற்க்கு முன்னிலை படுத்தி எப்படி பார்ப்பது?????


வெள்ளி, 19 டிசம்பர், 2014

புழக்கடை முனிகள்




பெசாவரென்றால்
உய‌ர‌மான‌ கோட்டையாம்
கோட்டையின்  அடித்தளமின்றோ
மண்ணுக்கடியில்
மண்ணோடு மண்ணாய்,
ராணுவ பள்ளியோ
பிள்ளைகளின் சுடுகாடாய்,
கனிஷ்கரின் தலைநகரே
இன்று கண்ணீரில் கொடுநரகாய்

ஏய் தாலிபான் மிருகமே
பள்ளிக்குழந்தைகள்
இன்றுனக்கு பலியாடாய்
நிச்சயம்  ஒருநாள் நீயும்
படுகேவலமாய் பலியாவாய்

புத்தகமேந்திய கைகள்
ஏ.கே நாற்பத்தியேழேந்திய
கைகளையும் விட வலியதென்றோ
உன் தோட்டாக்களால் வீழ்த்திட
துணிந்தாய்

விதைத்தவனிருக்க
விரலையருத்து
என்ன சுகம் கண்டாய்???

ஒருவனை நரகத்திர்க்கனுப்பியதற்க்கா???
அந்த நரகத்தையே
பூமிக்கிழுத்து வந்தாய்???

அந்த வெறி நாயின் மகன்கள்
தெரு நாயாய் பிறந்திருக்கலாம்
அல்லது மலமுன்னும் பன்னியாய்.

அவன்களை பெற்றவள்
அன்று கருவாகாதிருந்திருந்தால்,
அந்த பிஞ்சு குழந்தைகள்
இன்று பலியாகாதிருந்திருக்கும்.

தாய்மார்களின் சாபங்களெல்லாம்
தாலிபான்களின் உயிர்குடிக்கட்டும்
உறைந்து கிடக்கும் ஒவ்வொரு உதிரமும்
அவர்களின் உதிரத்தால் மீண்டும் ஈரமாகட்டும் சீக்கிரமாய் அந்த தீவிரவாதத்திற்கே
வாதம் வந்து முடங்கி போகட்டும்

சகோதரர்களே
உங்கள் உயிரின் வலி
நாங்கள் அறிவோம்
உங்கள் எதிரிகள் நிச்சயமாய்
நாங்களில்லை என்பதை
இன்றாவது உணர்ந்துகொள்ளுங்கள்
இதோ என்னால் முடிந்தது
எல்லா இந்தியர்களின் சார்பிலும்
என் விழிநீர்!

- தங்கராஜ் பழனி