என் பப்பியின் கவிதை
புரிவதே இல்லை
என் மேல் வீட்டு அம்மாவுக்கு
"நாய் ஏன் இப்படி குரைக்குது?"
என்கிறாள்!!
என் பப்பியை விட
மேலும் சத்தமாய்!!!...
சனி, 22 டிசம்பர், 2012
அந்த ஒரு கேள்வி
Posted by Thangaraj Pazhanee on 5:45 PM
படித்து தெளிந்த பின்னும்
பதில் கூற முடியாமல்
பாமரனிடம் தோற்கச்செய்த
அந்த ஒரு கேள்வி
இன்னும் என் நினைவில்
நீங்காத காயங்களாய்!
தூக்கத்தில் கூட,
கவிசேர்க்கும் என்னை
சிந்தனை குதிரைகளை
ஓடவிடும் நேரத்தில்
அந்த ஒரு கேள்வி
இன்னும் உறங்கவிடாமல்!
ஆயிரம் கவிதைகளில்,
ஆழ்ந்த கருத்துகளால்,
அறிவுரை கேள்விகளுடன்,
பறந்து வந்த என்னை
அந்த ஒரு கேள்வி
சிறகை என்னுடன் நெருங்கவிடாமல்!
கவிதை...
Posted in கவிதைகள்
வியாழன், 20 டிசம்பர், 2012
வெற்றியின் தங்கை
Posted by Thangaraj Pazhanee on 2:41 PM

தோல்வியே
உனை நான்
வரவேற்கிறேன்!
நீ என்னை துயரப்படுத்தினாலும்
நீ என்னை காயப்படுத்தினாலும்
தோல்வியே
உனை நான்
வரவேற்கிறேன்!
நீ என் கனவுகளை
திருடிச்சென்ற போதிலும்
நீ என் முன்னேற்ற படிகளையெல்லாம்
இடித்துவிட்ட போதிலும்
தோல்வியே
உனை நான்
வரவேற்கிறேன்!
நீயே என் தலைகணத்தை
குறையவைத்தவள்
நீயே என் கலைநயத்தை
உயரவைப்பவள்
வெற்றியின் தங்கையே
தோல்வியே
உனை நான்
வரவேற்கிறே...
Posted in கவிதைகள்
செவ்வாய், 18 டிசம்பர், 2012
கும்கி விமர்சனம்
Posted by Thangaraj Pazhanee on 4:04 PM

யானைகளை வைத்து பிழைப்பு நடத்தும் தனது நண்பர் ஒருவருக்காக கோவில் திருவிழா, கல்யாண விழா போன்ற ஊர் விழாக்களுக்கு பழக்க படுத்த பட்ட தன்னுடைய உரிமம் இல்லாத யானையுடன் ஆதி காடு என்ற மலை கிராமத்தில் அட்டகாசம் செய்யும் கொம்பன் என்ற காட்டு யானையை விரட்ட கும்கி அல்லாத தன்னுடைய யானையை கும்கி யானை என்று சொல்லி இரண்டு நாட்களில் திரும்பி விடும் நம்பிக்கையில் வருகிறார்கள் கதா நாயகனான...
Posted in திரை விமர்சனம்
வெள்ளி, 23 நவம்பர், 2012
மாற்றங்கள்
Posted by Thangaraj Pazhanee on 10:03 PM

பேருந்திலிருந்து
இறங்கியதிலிருந்தே
ஒரு சின்ன சந்தேகம்
சேர்ந்துகொண்டே
வருகிறது
இது என் ஊர் தானா?
சத்தியமாய்
இது என் ஊர் தான்
சோல்லிக்கொண்டே
நடந்தேன்
சிறு வயதில்
சம்சு வும் நானும்
சேர்ந்து விளையாடிய
மணல் வீதிகள்
இப்போது
எங்கே போயின?
எப்போதும்
நிறைந்தேயிருக்கும்
அரசன் குளத்தின்
தண்ணீர் எங்கே?
ஓவ்வொறு
வீடுகளின் வாசலிலும்
வளர்ந்து கிடந்த
பூவரசகள்
இப்போது
வீட்டினுள்ளே
குரோட்டன்சுகளாய்
மணற்பரப்பாய்...
Posted in கவிதைகள்
வியாழன், 1 நவம்பர், 2012

எதை வேண்டுமானாலும்
பேசும் இவைகள்
அவரவர் அறியாமலேயே!
சில நேரங்களில்
நண்பர்களையும் திட்டிவிடும்
ஏனென்று தெறியாமலேயே!
அவரவர்க்குடையதாயினும்
இத்தனை ஆட்டம் போடும்
இந்த சதை துண்டுக்கு
யார்தான்
இத்தனை உரிமை தந்தவரோ
அவரே உணராமல்?
...
Posted in கவிதைகள்
திங்கள், 29 அக்டோபர், 2012

எங்கள் வீட்டு
புறவாசல்
நானே அறியாமல்
நான் வளர்ந்த
புறவாசல்!
முதல் முதலாக
எனது கிறுக்கல்கள்
ஆரம்பமானதும்
அங்குதான்
செடி கொடிகளுடன்
நான் பேசக்கற்றுக்கொண்டதும்
அங்குதான்
என்னுடைய எல்லா
உணர்வுகளையும்
புரிந்துகொள்ள
புறவாசலில்
எனக்கென்று உண்டு
ஒரு வேப்பமரம்!
என் கோபப் பொழுதுகளில்
அது அடிவாங்கிகொள்ளும்
என் வெற்றி பொழுதுகளில்
அது பூமாரித்தூ வும்
தொட்டில்...
Posted in கவிதைகள்
சனி, 27 அக்டோபர், 2012
இயந்திர வாழ்க்கை
Posted by Thangaraj Pazhanee on 8:59 AM

சினிமா கொட்டகைக்கு
குடும்பத்துடன் சென்று
மணர் பரப்பில் அமர்ந்து
பொழுது போக்கிற்காக இல்லாமல்
ஏதோ ஒரு மகிழ்ச்சிக்காக
ஆரவாரமாய் படம் பார்ப்பது போய்
இப்போது அமைதியாய்
அழுது கோண்டே பார்க்கப்படுகிறது
சீரியல்!
ஆட்டுரலில் அம்மாக்கள்
இட்லிக்கு மாவரைக்கையில்
உதவி புரியும் மகன்கள்
இப்போது தேவையே இல்லை
வேகமாய் அரைக்க வந்துவிட்டது
ஒவ்வொரு வீடுகளிலும்
கிரைண்டர்!
அம்மாக்களின்...
Posted in கவிதைகள்
வெள்ளி, 26 அக்டோபர், 2012
அந்த நாட்கள்
Posted by Thangaraj Pazhanee on 7:51 PM

பிரிக்க முடியாதபடி
சேர்ந்தே இருக்கிறது
என் பழைய நினைவுகளோடு
உன் நினைவுகளும்
புத்தகச் சுமையைத்தவிர
வேறெந்த சுமையும் இல்லாத
அந்த நாள் ஞாபங்கள்
என் மனச்சுமையை
மேலும் அதிகரிக்கிறது
தோலைக்காட்சியில் தெரிவோம்
என்ற நம்பிக்கையிலே
பக்கத்து வீட்டு
பங்கஜம் மாமியின்
ஆன்டெனா கம்பியை
தொங்கி உடைத்தது!
பிள்ளையார் கோயிலிலே
விடலை போட்ட தேங்காயினை
நம்மை விட சிறுவனிடம்
தட்டிப்பறித்தது!
குச்சி...
Posted in கவிதைகள்

காலை முதல்
மாலை வரை காத்திருந்து
மாலை உதிராமல்
கைகளுக்குள் அடக்கிவைத்து
உன் தலைவன் வந்தவுடன்
அவன் கழுத்தில் சூட்டினாய்
தேர்தல் நேரத்தில்
ஓடோடி ஓட்டு கேட்டாய்
எத்தனையோ ஓட்டு போட்டாய்
செத்து போன உன் தாத்தா பாட்டிக்கும்
வாக்குரிமை வாங்கி தந்தாய்
நீ ஓட்டு போட்ட
உன் தலைவன் வென்று விட்டான்
நீயோ தோற்று போனாய்...
Posted in கவிதைகள்
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)
என் பப்பி