திங்கள், 29 அக்டோபர், 2012

புறவாசல்

எங்கள் வீட்டு புறவாசல் நானே அறியாமல் நான் வளர்ந்த புறவாசல்! முதல் முதலாக எனது கிறுக்கல்கள் ஆரம்பமானதும் அங்குதான் செடி கொடிகளுடன் நான் பேசக்கற்றுக்கொண்டதும் அங்குதான் என்னுடைய எல்லா உணர்வுகளையும் புரிந்துகொள்ள புறவாசலில் எனக்கென்று உண்டு ஒரு வேப்பமரம்! என் கோபப் பொழுதுகளில் அது அடிவாங்கிகொள்ளும் என் வெற்றி பொழுதுகளில் அது பூமாரித்தூ வும் தொட்டில்...

சனி, 27 அக்டோபர், 2012

இயந்திர வாழ்க்கை

சினிமா கொட்டகைக்கு குடும்பத்துடன் சென்று மணர் பரப்பில் அமர்ந்து பொழுது போக்கிற்காக இல்லாமல் ஏதோ ஒரு மகிழ்ச்சிக்காக ஆரவாரமாய் படம் பார்ப்பது போய் இப்போது அமைதியாய் அழுது கோண்டே பார்க்கப்படுகிறது சீரியல்! ஆட்டுரலில் அம்மாக்கள் இட்லிக்கு மாவரைக்கையில் உதவி புரியும் மகன்கள் இப்போது தேவையே இல்லை வேகமாய் அரைக்க வந்துவிட்டது ஒவ்வொரு வீடுகளிலும் கிரைண்டர்! அம்மாக்களின்...

வெள்ளி, 26 அக்டோபர், 2012

அந்த நாட்கள்

பிரிக்க முடியாதபடி சேர்ந்தே இருக்கிறது என் பழைய நினைவுகளோடு உன் நினைவுகளும் புத்தகச் சுமையைத்தவிர வேறெந்த சுமையும் இல்லாத அந்த நாள் ஞாபங்கள் என் மனச்சுமையை மேலும் அதிகரிக்கிறது தோலைக்காட்சியில் தெரிவோம் என்ற நம்பிக்கையிலே பக்கத்து வீட்டு பங்கஜம் மாமியின் ஆன்டெனா கம்பியை தொங்கி உடைத்தது! பிள்ளையார் கோயிலிலே விடலை போட்ட தேங்காயினை நம்மை விட சிறுவனிடம் தட்டிப்பறித்தது! குச்சி...

தொண்டன்

காலை முதல் மாலை வரை காத்திருந்து மாலை உதிராமல் கைகளுக்குள் அடக்கிவைத்து உன் தலைவன் வந்தவுடன் அவன் கழுத்தில் சூட்டினாய் தேர்தல் நேரத்தில் ஓடோடி ஓட்டு கேட்டாய் எத்தனையோ ஓட்டு போட்டாய் செத்து போன உன் தாத்தா பாட்டிக்கும் வாக்குரிமை வாங்கி தந்தாய் நீ ஓட்டு போட்ட உன் தலைவன் வென்று விட்டான் நீயோ தோற்று போனாய்...

எதிர்காலத்திற்காக

இளைஞனே நிமிர்ந்து நில் இமயம் உன்னை அண்ணாந்து பார்க்கட்டும்! இளைஞனே நீ குட்டக்குட்ட குனிவதில்லை குட்டாமலே வளைந்து ஒடிந்துபோகிறாய் இளைஞனே நீ புகைக்குள் புதைந்து புகைஞனாகிப் போனாய் அந்த வெண்புல்லாங்குழலில் என்ன தான் இருக்கிறது இப்படி ஊதித்தள்ளுகிறாய்! அந்த புல்லாங்குழலில் கேட்பது சந்தோச ராகமென நீ உணரலாம் ஆனால் அது சோகராகமென்பதை புற்றுநோய் நிருபித்துவிடும்! போதைக்குள்...

வியாழன், 25 அக்டோபர், 2012

நம்பிக்கை

அன்றொறு நாள் நானோ தனிமையில் இருளான கரும் அறையில் அன்னையின் கருவறையில்! பூமியில் பிறந்திட நானும் காத்திருந்தேன் விழிகளை திறந்து கொண்டே பார்த்திருந்தேன் அன்னையின் அலறலையும் காதில் கேட்டுக்கொண்டிருந்தேன் என் மெய் தாயிடமிருந்தபோதோ பேரின்பம் பூமியை தொட்டபின்போ பேரதிர்ச்சி! விழித்திருந்தும் உலகெனக்கு தெறியவில்லை வெளிச்சத்தை  தேடியபோதும் கிடைக்கவில்லை விடியலோ...

புதன், 24 அக்டோபர், 2012

கல் வெட்டு

சித்திரை ஒன்று சீக்கிரம் விடிந்தது அம்மா எழுப்பியதால் காலையில் குளித்து கோயில் சென்றேன் அப்பா திட்டியதால் அழகழகாய் கலைஅழகை நான் அன்று தான் கண்டேன் ஆயிரம் கற்களால் அழகிய மாளிகையாய் கோயில் ஆனால் அங்கு குடியிருந்ததோ கடவுளும், வெளவால்களும் மட்டுமே. எல்லா மனிதனும் பிறந்து வந்த கர்ப்பகிரகமெனும் பெயர் கொண்ட இடத்தினுள் அய்யர் மட்டுமே சென்றார். கல்லை...